துாக்கம் குறைந்தாலே, சிடுசிடுப்பு வந்துவிடும்; மனம் மகிழ்ச்சியாக இருக்க, அடிப்படை தேவை, நல்ல துாக்கம். இதோ அதற்கு சில எளிய வழிகள்...
1. தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே. சாப்பிட்டு விடுங்கள். பின், 20 நிமிடத்திற்கு பின், ஒரு கப் இளஞ்சூடான பால் குடியுங்கள்; தூக்கம் கண்களை சுழற்றும்.
2. தூங்க செல்வதற்கு முன் மது அருந்துவதோ, காபி குடிப்பதோ, புகை பிடிப்பதோ கூடாது.
3. அதே போல், நல்ல துாக்கத்துக்கு, வயிறு நிறைய சாப்பாடும் வேண்டாம். பட்டினியும் வேண்டாம். நிறைய சாப்பிட்டால், அரை மணி நேரத்திற்கு பின், சின்னதாக நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
4. உங்கள் படுக்கையறை, அதிக சூடாகவோ அல்லது அதிக குளிச்சியாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
5. இரவில் நீண்ட நேரம் பாட்டு கேட்பது, மொபைலில், 'கேம்ஸ்' ஆடுவது, ஆடியோ புக் படிப்பது மற்றும் டிவி பார்ப்பது போன்றவைகளை தவிர்த்தாலே நன்கு தூக்கம் வரும்.
6. சுத்தமான படுக்கையும், உங்களுக்கு சவுகர்யமான உணர்வை கொடுக்கிற தலையணையும், தூக்கத்தின் சிறந்த நண்பர்கள்.
7. உங்கள் படுக்கையறையின். "நைட் லேம்ப்' மெல்லிய வெளிச்சத்தை உமிழ்ந்தாலே போதும்.
8. தூங்குவதற்கு முன், வெதுவெதுப்பான நீரில் ஒரு குளியல் போடுங்கள். உடம்பை துவட்டும்போதே கொட்டாவி வரும்.
9. இரவில், தளர்வான, காற்றோட்டமான, பருத்தி ஆடைகளையே அணியுங்கள்.
10. மனதை, "ரிலாக்ஸ் செய்யும் புத்தகங்கள், தூக்கத்தை வரவழைக்கிற ஒரு நல்ல துணைவன்.